Skip to main content

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க இயேசுவைப் பாடிடுவேன்


எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

சென்ற காலம் முழுவதும் காத்தாரே
ஓர் சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
சுகபெலன் அளித்தாரே -அல்லேலூயா

சிலவேளை இமைப் பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும் கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே -அல்லேலூயா

பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே -அல்லேலூயா

களிப்போடு விரைந்தெம்மை சோத்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
ஆனுதிம் காத்திருப்போம் -அல்லேலூயா