Skip to main content

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன்


எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்

அனுபல்லவி
இந்நாள் வரை என்வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உமைப் போற்றுமே -எண்ணி

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனிதூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றமே -எண்ணி

நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே -எண்ணி

வால வயதுள்ளோனோரும்
மிகும் வயதால் முதிந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலே
பாடி உம்மைப் போற்றுவாரே -எண்ணி