Skip to main content

என்னை என்றும் நடத்திடுமே உம்மை என்றும் நோக்கிடுவேன்


என்னை என்றும் நடத்திடுமே
உம்மை என்றும் நோக்கிடுவேன்
என் வாழ்நாட்களெல்லாம்
உமக்காக ஜீவிப்பேன்
என் ஜீவன் சுகம் பெலன் இயேசுவே

கண்களை உம்மேலே பதித்து விட்டேன்
தேவைகள் யாவையும் சந்திப்பவரே
கலங்கிடேனே நான் கலங்கிடேனே
யெகோவாயீரே என் தேவன் அல்லவா

சத்துரு யுத்தம் செய்ய எதிர்வந்தாலும்
கர்த்தரே எனக்கு ஆதரவானீர்
தப்புவித்தீரே விசாலத்தில் வைத்தீரே
யெகோவாநிசி என் தேவன் அல்லவா

நடந்திடமுடியா நேரங்களில்
தோளின்மேல் தூக்கியே சுமந்தீர் என்னை
நல்ல மேய்ப்பனாய் என்னை நடத்துகின்றீர்
யெகோவாரூவா என்தேவன் அல்லவா