Skip to main content

கல்வாரியில் தொங்குகிறார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்


கல்வாரியில் தொங்குகிறார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே

வேர்வையும் இரத்தமுமாக ஆத்துமா வியாகுலம்
அடைந்தாரே இயேசு உனக்காக
தந்தையே உம் சித்தம் என்று இயேசு கதறினாரே - கல்வாரி

சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடித்தார் கோரமான காட்சியாகும் - கல்வாரி

மாசற்ற தேவகே மகிமை யாவும் துறந்தோரமாய்
நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே நீதிக்கு பிழைக்கச் செய்தார் - கல்வாரி

கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய் தழும்பாலே குணமடைவாய் - கல்வாரி

எத்தனை துன்பங்கள் என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே சென்று வாழ்ந்திடுவாய் - கல்வாரி