Skip to main content

கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே


கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே
கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே
ஊழியம் செய்குவாயே

நல்ல தீர்க்காயுள் பெருகிடவே
நித்திய ஜீவனும் பெற்றிடவே
பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே
பரன் தயை புரிவார்

வாழ் நாளெல்லாம் களி கூர்ந்திடவே
வாடாத கிருபை ஈந்திடுமே
கிருபை கிருபை என்றென்று முள்ளதே
கர்த்தனை வாழ்த்திடுவோம்