Skip to main content

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே


காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

கன்மலைகள் பெயர்க்கும்படியாய்
கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலனடைந்து
கழுகு போல எழும்பிடுவாய்

அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை