Skip to main content

கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே


கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்யம் ஏறுதே
அவர் பாவ நாசகா
சமாதான காரணா
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீத்துப்
பெத்லெகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்யம் ஏறுதே

வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க, நரதேவனே
அருள் அவதாரமே!
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்யம் ஏறுதே

வாழ்க சாந்த ப்ரபுவே
வாழ்க நீதி சூளீயனே
மீட்பராக வந்தவர்,
ஓளி, ஜீவன் தந்தவர்,
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்யம் ஏறுதே