Skip to main content

காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்! வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்!


காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்!
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்!
நீர் தாங்கின, தூர காட்சி, ஆசியேன்!
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுவேன்

என் இஷ்டப்படி நடந்தேன் ஐயா! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை! இப்போதே நடத்துமேன்!
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்

இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்! இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்,
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்