Skip to main content

கர்த்தத் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே தாழ்ச்சி அடையேன் என்றுமே


கர்த்தத் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் அமய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார் - கர்த்தர்

ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்ததத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார் - கர்த்தர்

மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே - கர்த்தர்

சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார் - கர்த்தர்

ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன் - கர்த்தர்