Skip to main content

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கி தவிக்காதே


கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கி தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அனைத்துக் கொள்வார்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்