Skip to main content

கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்


கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்

கர்த்தரை நான் தேடினேன்
அவர் தம் ஒளியை வீசச் செய்து
எந்தன் பயங்கள் யாவற்றையும்
நீக்கி என்னை விடுவித்தாரே! - கர்த்தரை

சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாக இருந்திடினும்
கர்த்தரை தேடும் பிள்ளைகட்கு
குறைவின்றி நன்மைகள் கிடைத்திடுமே - கர்த்தரை

நீதிமானை அணுகிடும் துன்பங்கள்
அநேகமாக இருந்திடினும்
கர்த்தர் நல்லவர் என்பதையே
ருசித்துப் பார்த்திட செய்கின்றார்

அன்பின் இதயம் கர்த்தரை . . . . துதிக்கும்
அல்லேலூயா என்றம் பாடிடுமே!
கர்த்தரின் கரம் நம்மைக் காத்ததினால்
கருத்துடன் இன்றும் ஸ்தோத்தரிப்போம்