Skip to main content

கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன்


கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2)

என் முகத்தை தேடும் என்றீர்
இன்னமும் நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன் உன் பொன் முகமே
சிலுவை நோக்கி பார்த்த கண்கள்
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர்

தகப்பனும் தாயும் என்னைக்
கைவிடும் வேளை வரினும்
அரவணைக்கும் உந்தன் கரமே
கழுகு தன் குஞ்சுகளைப்
பறந்து காப்பது போல
காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர்

எந்தனுக்கு விரோதமான
எரிகோவின் மதில்களைத்
தகர்த்து சாம்பலாக்கிடுவீர்
எதிரிகளின் சேனைகள்
என்றும் என்னைத் தொடராமல்
பின்தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர்

காலமோ கடைசியாகி
பாவம் பாரில் படர்ந்து பெருகி
உலக வேஷம் கடந்து செல்லுதே
வருகைத் தாமதிக்கையில்
புறாவைப் போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மைக் காணுவேன் - கர்த்தர்