Skip to main content

கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே


கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்து நாம் ஆனந்திப்போம்

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப்பாதையிலே இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே

எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்த்தனரே பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய

அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்

நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
ஆசையாது அழைப்பினை காத்துக் கொள்வோம்

ஆவியும் மணவாட்டியும் ஆவலுடனே
வாருமென்றழைக்கின்றாரே - வாரும் என்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்

வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக்காருமில்லை