Skip to main content

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார்


கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு
அவர் உன்னை ஆதரிப்பார்
நீதிமான் கால்களை
தள்ளாடவே வொட்டார்
கர்த்தர் உன்னை விசாரிப்பார்
கர்த்தர் உன்னை ஆதரிப்பார்
கர்த்தர் உன்னை தாங்கிடுவார்
கர்த்தர் உன்னை தேற்றிடுவார்

கவலையினால் சரீர அளவில்
ஒன்றையும் கூட்டவே முடியாது
நாளை தினத்தைக் குறித்து
கவலைப்பட வேண்டாம்

பெலவீனம் யாவையும் ஏற்றுக்கொண்டே
நோய்கள் யாவையும் சுமந்தாரே
நேசரின் அன்பின் காயங்கள்
உன்னை சகமாக்கும்

உன்னை விசாரிக்கும் தேவன் உண்டு - உன்
கவலையை அவர்மேல் வைத்துவிடு
கண்ணீர் கவலை துடைக்கும் நேசர்
உன்னை தேற்றிடுவார்

உனக்காய் யாவையும் செய்திடுவார் - நீ
அறியா வழியை திறந்திடுவார்
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே