Skip to main content

கோடா கோடி Þதோத்திரம் பாடி கிறிÞதுவின் அன்பை ருசிப்போமே


கோடா கோடி Þதோத்திரம் பாடி
கிறிÞதுவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றினின்று தூக்கியெடுத்துத்
தேற்றியணைத்துக் காத்துக் கொண்டாரே - தேவசுதன்

பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனின் வேளையைத் தேடி வந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ பூவுலகில் - கோடா

தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாகமெடுத்தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மை பலியாய் தத்தம் செய்தாரே எந்தனுக்காய் - கோடா

ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நல் மேய்ப்பன்
இன்றுமென் மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் இறையவனை- கோடா

தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் நித்தியமாய் - கோடா

குயவனின் கையில் களிமண்ணைப் போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா ஏழை என்னை - கோடா