Skip to main content

காலை தோறும் கர்த்தனே - புது கிருபையை தினம் பொழிகின்றீரே - காலை


காலை தோறும் கர்த்தனே - புது
கிருபையை தினம் பொழிகின்றீரே - காலை

அனுபல்லவி
நம் தேவன் நல்லவரே
மா தேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே - காலை

ஆழியின் அலைகள் ஓயாது போல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே - காலை

ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறு ரூபமாகிடுவேன் - காலை

சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் - காலை

கனிமரமாய் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் - காலை

ஜாதிகள் நடுவில் உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர் - காலை