Skip to main content

கர்த்தர் பெரியவர் - அவர் துதிக்கு பாத்திரர்


கர்த்தர் பெரியவர் - அவர்
துதிக்கு பாத்திரர்
தேவ நகரத்தில் பெரியவர்
சீயோனில் பெரியவர்

வடதிசை சீயோன் பர்வதமே
வடிப்புள்ள அவரது ஸ்தானமதே
மஹாராஜா இயேசு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி நிறைந்த நகரமிதே - கர்த்தர்

அரண்மனை தனிலே அடைக்கலமாய்
அறியப்பட்டார் எங்கள் ஆண்டவரே
அவரின் செய்கையை பகைஞர் கண்டு
கலங்கி ஓடி மறைந்தனரே - கர்த்தர்

தேவனே உமது ஆலயத்தில்
கிருபை என்றும் விளங்க செய்யும்
நீதி நிறைந்த உமது கரம்
பூமியில் என்றும் விளங்கிடுமே - கர்த்தர்