Skip to main content

கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே


கர்த்தர் உன்னதரே
மகிமையில் சிறந்தவரே
மகிமையின் தேவன் செயல்களை நினைத்து
எதனை செலுத்திடுவாய்?

ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய் - கர்த்தர்

மகிமை உன்னில் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
அநுதினமும் அவர் நாமமதை
சேவித்து வழி நடப்பாய் - கர்த்தர்

உந்தனுக்காய் தேவ கரம்
யாவையும் முடித்ததுவே
அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய் - கர்த்தர்

நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய் - கர்த்தர்