Skip to main content

கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே


கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திருரத்தமே - அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையினும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே - விலை

சிந்தையிலே பாரங்களும்
நித்தைகள் ஏற்றவராய்
தொங்குகிறார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே - விலை

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பதையே
சிந்தித்தே சேவை செய்வேன் - விலை

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணிலவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே - விலை