Skip to main content

குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர் பிராணநாதன் (2) என் பேர்க்காய்ச் சாகின்றார்


குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்
பிராணநாதன் (2) என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்
தேவ குமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய்த் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ