Skip to main content

காணாத ஆட்டின் பின்னே - கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்


காணாத ஆட்டின் பின்னே - கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா

முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் - காணாத

சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகிர்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
ஏசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ - காணாத

என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் - காணாத

துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் - காணாத

எத்தனை நேரம் உன்னை அழைந்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா - காணாத