Skip to main content

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த கல்கள் கூப்பிடும் நீ காணாவிட்டால்


கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
இந்த கல்கள் கூப்பிடும் நீ காணாவிட்டால்

ஆபிரகாமின் புத்திரர் என்போர்
ஆண்டவரை மறந்து விட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க
வல்லவர் உண்டு தெரியுமா - கல்

வேதம் கற்று போதிப்போரும
சத்தியத்தை மறுதலித்தால்
ஆயக்காரர் பாவிகளும்
பரலோகில் இடம் பெறுவாரே - கல்

ராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர்
அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர்
கல்யாண சாலை நிரப்புவார் - கல்